திருப்பூர் || மூதாட்டி உடலுக்கு இறுதி சடங்கு செய்த பெண்கள் - அதிரவைத்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்திராணி வயது மூப்பின் காரணமாக கடந்த 5-ந் தேதி காலமானார். இவரது உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவர்கள் மூதாட்டியின் உடலை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றனர். 

அங்கு மூதாட்டியின் உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி மின் மயானத்தில் வைத்து தீ வைத்தனர். பொதுவாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதிச்சடங்கை செய்வார்கள். 

ஆனால், பெண்கள் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை கொண்டு சென்று ஆண்கள் செய்யும் அனைத்து சடங்குகளையும் செய்து வழக்கத்தையே மாற்றியமைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womans carried old woman body to graveyard


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->