ஏற்காடு பேருந்து விபத்து: காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்த இபிஎஸ்.!
Yercaud bus accident EPS inquired health injured
ஏற்காடு மலை பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளான அதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிறகு, ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கான பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம இபிஎஸ் வலியுறுத்துள்ளார்.
மேலும் பழுதடைந்த பழைய பேருந்துகளை உடனடியாக நீக்கிவிட்டு புதியதாக பேருந்துகள் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Yercaud bus accident EPS inquired health injured