கூவம் ஆற்றில் மிதந்த இளம்பெண் சடலம்: கொலை செய்யப்பட்டாரா? துப்புதுலக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், திருவேற்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் பெண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என்றும் சுடிதார் அணிந்து இருந்தார் என்றும் பல இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல கோணங்களில் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களில் காணாமல் போன பெண்கள் குறித்து விவரங்களை சேகரித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கூவம் ஆற்றில் பெண் சடலம் மிதந்து வந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl body floating koovam river


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->