தாறுமாறாக ஓடிய கார்.! வாலிபர் பலி, ஒருவர் படுகாயம்.! 4 பேர் கைது - Seithipunal
Seithipunal


சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி வாலிபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மதன் (30) என்பவர் சென்னை வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக திருவான்மியூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதில் சாலையோரம் நின்றிருந்து மதன் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மதன் உயிரிழந்துள்ளார். மேலும் அப்பகுதியில் கொடிக்கம்பம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சங்கர் என்பவர் மீதும் கார் மோதியது. இதையடுத்து பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த மதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த தியாகராய நகரை சேர்ந்த அன்பரசன் மற்றும் அவருடன் வந்த அவர்களது நண்பர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து விசாரணையில் காரை ஓட்டி வந்த அன்பரசன், மதுகுடித்து இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young killed one injured in car collision in Chennai


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->