கனடாவில் இந்திய மாணவர்க்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டில் உள்ள ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் கார்த்திக் சைனி. இந்தியாவைச் சேர்ந்த இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அங்கு அவர் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியதில், சில மீட்டர் தூரத்துக்கு அவர் இழுத்து செல்லப்பட்டார். இந்த கோர விபத்தில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கனடா சென்றதாக அவரது உறவினர் பர்வீன் சைனி தெரிவித்தார்.

மேலும், கார்த்திக்கின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்வதற்கு கூடிய விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் நம்புவதாக பர்வீன் சைனி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian student died in canada


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->