லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர்: பா.ஜ.க மூத்த தலைவர் பதிவு! - Seithipunal
Seithipunal


லண்டன் லெவுப்ரோ பல்கலைக்கழகத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். பாட்டியா என்பவர் படித்து வந்தார். கிழக்கு லண்டனில் தங்கி இருந்த இவர் கடந்த 15 ஆம் தேதி முதல் காணவில்லை.  

இவர் எங்கு சென்றார் என்பது குறித்தும் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த பா.ஜ.க மூத்த தலைவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு வெளி விவகாரத்துறை மந்திரிக்கு கொண்டு சென்று உங்களுடைய உதவி முக்கியம் என கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் மாணவரின் கல்லூரி அடையாள அட்டை மற்றும் பிற சான்றிதழ்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த செய்தி மக்களிடையே பரப்ப வேண்டும் எனவும் இந்திய மாணவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தொடர்புகொள்ள 2 எண்களையும் பகிர்ந்துள்ளார். 

இந்திய மாணவர் கடைசியாக லண்டனையின் கேனரி வார்ப் பகுதியில் இருந்துள்ளார். அதன் பிறகு அவரை காணாததால் அவரை கண்டறியும் முயற்சியில் இந்திய தூதராக மற்றும் பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian student missing in London 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->