ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை..நண்பர்களுக்கு வலைவீச்சு!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்று வந்தவர் நவ்ஜித் சந்து. இந்திய வம்சாவளியான அவர் தனது நண்பர்கள் அபிஜித், கார்டன் ஆகியோருடன் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்திய வம்சாலியானவர்களும் அதே பல்கலைகழகத்தில் உயர் கல்வி பயின்று வந்தனர்.

இந்த நிலையில், வீட்டின் வாடகை கொடுப்பதில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறி உள்ளது. சகோதரர்களான அபிசித்தும் கார்டூனும் சேர்ந்து நவ்ஜித்தை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்து உள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் அருகில் இருந்த காரில் ஏறி தப்பினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய ஓடிய சகோதரர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Murder of Indian student in Australia


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->