உங்களுக்கு அறிவு இருக்கா? - கோபத்தின் உச்சிக்கு சென்ற நடிகர் ஜீவா.! - Seithipunal
Seithipunal


தேனியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்காக நடிகர் ஜீவா வருகை தந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர்.

ஆனால் நடிகர் ஜீவா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். இருப்பினும், அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் மலையாள சினிமா குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு ஜீவா அந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ஜீவா உங்களுக்கு அறிவு இருக்கிறதா?, நான் எந்த நிகழ்ச்சிக்காக வந்துள்ளேன்? சம்மந்தமில்லாமல் கேள்வி கேட்கிறீர்கள்? என்று கோபமாக கத்தியுள்ளார்.

இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jeeva obsessed with reporters


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->