பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியால் கதரும் ரசிகர்கள்.! இதுக்கு எதுக்குடா? 24 மணிநேரம்..! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சி சில வருடங்களாக தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் பிரபலமடைந்து படவாய்ப்புகளுடன் ஜோராக இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் விஜய் டிவியின் டிஆர்பிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் உதவுகிறது என்பது உண்மை. எனவேதான் அடுத்தடுத்த சீசன்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து முடிந்தது. மிகப்பெரிய அளவில் சுவாரசியத்தை நிகழ்ச்சி ஏற்படுத்தவில்லை. இதனால் விஜய்டிவி எதிர்பார்த்த டிஆர்பி கிடைக்கவில்லை என்பதால் தான் அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்று காலை ஓபன் செய்து பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறி சினேகன் வாக்கிங் செல்வது, போட்டியாளர்கள் தூங்குவது என்று போரடிக்கும் விதமாக இருக்கிறது என்பதால், ரசிகர்கள் இதற்கு பேசாமல் எடிட் செய்திடுங்கள். படு மொக்கையாக இருக்கு என்று தற்போது தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BB ultimate first day


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->