பணம் தருவதாக அழைத்து துணை நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற பைனான்சியர்.! - Seithipunal
Seithipunal


ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் இந்திரா நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண், தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில், அவருக்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. இதனால் தனது நண்பரான பாலு நாயக் என்பவரிடம் போன் செய்து அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். 

பாலு நாயக் தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் அங்கு சென்றார். 

அப்போது, பாலு நாயக் அந்த இளம்பெண்னை அறையில் தள்ளி கதவை மூடிவிட்டு தன்னையும் தனது நண்பர்களையும் அனுசரித்து சென்றால் கூடுதலாக பணம் தருவதாக கூறி பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாலு நாய்க்கை தள்ளிவிட்டு தப்பி வீட்டிற்கு வந்து தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். 

அவர்கள் பாலு நாயக் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cinema side actor abuse


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->