தொடர் அட்டூழியம்... நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்கள் தாக்குதல் நடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில், நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகில் நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகின் மீதும், படகில் ஏறி மீனவர்களை ஆயுதங்களால் தாக்கியும் உள்ளனர்.

மேலும், 5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ வலைகளை பறித்துக்கொண்டு மீனவர்களை விரட்டியும் அடித்துள்ளனர். உடனடியாக மீனவர்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினர். இந்த தாக்குதலில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். தற்போது அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langan navy attack tn fishermans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->