பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்குப்போட்டு தற்கொலை.. சோகத்தில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


மேற்குவங்காளத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே  வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பல்லவி காணப்பட்டார். அவரை பங்கூர்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் 2-வது தளத்தில் வசித்து வந்த அவர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறை சம்பவம் நடந்த பகுதியில் இருந்து தற்கொலை செய்ததற்கான கடிதம் உள்ளதா என தேடியும் கிடைக்கவில்லை.  இதனால் இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே நடிகை பல்லவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பல்லவியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்துவரும் சாக்னிக் சக்ரவர்த்தி என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை பல்லவி மறைவு ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், திரை துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pallavi Dey Passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->