அடேங்கப்பா.. நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கப்போகும் சரண்யா பொன்வண்ணன்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் அனைவருக்கும் சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். தற்போது, அவரது நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் படம் உருவாக உள்ளது. 

இது குறித்து அந்த படத்தின், இயக்குநர் விஷ்ணு ராமகிருஷ்ணன், "சரண்யா பொன்வண்ணன் ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிப்பதை நான் விரும்பவில்லை. 

அவர் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஏற்றவர் என்பதை நான் உணர்ந்தேன். எனவே, தான் அவரை கேங்ஸ்டராக இந்த படத்தில் நான் காட்ட விரும்பினேன்." என்று கூறியுள்ளார். இதில், ராஜ் வர்மா வில்லனாக நடிக்க அம்ஜத் கான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வன்முறை கும்பலை தடுக்கும் விதமாக இருக்கும் என்றும், தனது குடும்பத்தினருக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரண்யா பொன்வண்ணன் எப்படி கையாளுகிறார் என்பதும் தான் கதை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saranya ponvannan in gangster movie


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->