பெங்களூரு குண்டுவெடிப்புக் குறித்து விபரம் தெரிவித்தால் 10 லட்சம் சன்மானம் - என் ஐ ஏ அதிரடி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்திய குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது. இதுகுறித்து என்ஐஏ தெரிவித்ததாவது:-

பெங்களூரு குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் அப்துல் மதீன், அகமது தாஹா, முஷாவீர் ஹூசைன் ஷாஹிப் உள்ளிட்டோர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூபாய் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும். 

அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கத்தியாமல் பாதுகாக்கப்படும். தகவல் தெரிவிக்க விரும்புவோர் info. blr. nia@govt.in, 080-295 109 00, 890 424 1100 உள்ளிட்ட எண்களுக்கு தகவல் அளிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 lakhs prize to peoples for banglore bomb blast information


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->