பிரபல தாதா மரணம் - உ. பியில் 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் விசாரணைக் கைதியான பிரபல தாதா முக்தார் அன்சாரி, வாந்தி மற்றும் சுயநினைவின்மை புகார் காரணமாக சிறை அதிகாரிகளால் இரவு 8.25 மணிக்கு பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது:- அன்சாரியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து பண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் நேற்று கொண்டு வரப்பட்டார். அன்சாரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்று அறிக்கை வெளியிட்டது. 

இந்த நிலையில் உத்தரபிரதேச அரசு மாநிலம் முழுவதும் 144 தடை விதித்துள்ளது, அதே நேரத்தில் குண்டர்களுக்கு பரவலான செல்வாக்கு இருந்த மவு, பண்டா, காஜிபூர், பாலியா மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

144 in uttar pradesh for rowdy mukthar ansari died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->