ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


 ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஈஸ்ட்மென் 1932 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். "என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?" (My work is done. Why wait?) என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும்.

ஜார்ஜ் ஈஸ்ட்மன் George Eastman, ஜூலை 12, 1854 அன்று பிறந்தார்  - மார்ச் 14, 1932 அன்று மறைந்தார். இவர் கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது மிகப்பெரிய சாதனையாக இருந்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது.

ஜார்ஜ் ஈஸ்ட்மன் அவர்கள் 1854 இல் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார். ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார்.

 தனது நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கு, மருத்துவ உதவிகள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகளை தாராளமாக வழங்கினார். தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களின் நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ளார். இக்கொடையை பெரும்பாலும் ரோச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்திற்கும், மாசாசுச்செட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃவ் டெக்னாலஜி என்னும் பல்கலைக்கழகத்திற்கும் அளித்தார்.

 ஈஸ்ட்மென் 1932 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார். "என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?" (My work is done. Why wait?) என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

George Eastmans Death Anniversary


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->