கர்நாடகா : மோட்டார் சைக்கிள்-லாரி மோதி பயங்கர விபத்து - 3 வாலிபர்கள் பலி - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் மோட்டார் சைக்கிள்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தாவணகெரே ராம்நபர் பகுதியை சேர்ந்த பரசுராம்(21), சந்தோஷ்(23), சிவக்குமார்(26) ஆகிய 3 பேரும் கட்டிகேனஹள்ளி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது தாவணகெரே அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென எதிரே வந்த லாரியும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி உபயோக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 Youths killed in motorcycle lorry accident in Karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->