தேநீர் வியாபாரி 3வது முறை பிரதமர்! பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் விரக்தி - பிரதமர் மோடி!
3rd time Prime Minister Opposition parties despair PM Modi
காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் என்பதை நினைத்து எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
![](https://img.seithipunal.com/media/Modi ts1-6pd84.jpg)
இந்த நிலையில், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி எம்.பிக்களுக்கு உற்சாக வரவேற்பளித்தார்.
பின்னர் எம்.பிக்கள் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நேருக்கு பிறகு இந்திய வரலாற்றில் பலர் நேரடியாகவும் சில ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவும் பிரதமர் ஆகியுள்ளார்கள்.
![](https://img.seithipunal.com/media/modi amit Ts-3j7ra.jpg)
நேருக்குப் பிறகு ஒரு தேநீர் வியாபாரி தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று இருப்பதை நினைத்து எதிர்க்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர்.
காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் என்பது நினைத்து எதிர்க்கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
English Summary
3rd time Prime Minister Opposition parties despair PM Modi