உ.பி: வீட்டில் பயங்கர தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேச மாநிலத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தில் உள்ள ஷாப்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்து அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்து உள்ளனர்.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் அருண் குமார், மாவ் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 சிறார்கள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர் என்றும், முதற்கட்ட விசாரணையில் அடுப்பிலிருந்து தீ பரவியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 killed in house fire in uttar pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->