ஜார்க்கண்ட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்!...பொது மக்கள் பீதி அடைந்து ஓட்டம்! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநில தலைநகராக ராஞ்சி விளங்கி வருகிறது. இங்கிருந்து 35 கிலோ மீட்டர்  தொலைவில் குந்தி மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில்,  இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்றும், இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், ஜார்க்கண்டில் இரும்பு எகு தொழிலுக்கு புகழ்பெற்ற நகரமான  ஜாம்ஷெட்பூர் மற்றும் கந்த்ரா உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A sudden earthquake in jharkhand people panic and run


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->