மாமாவிற்கு பரிசளிப்பதற்காக 5 வயது சிறுவனை கடத்திய இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் குழந்தை இல்லாத தனது மாமாவிற்கு பரிசளிப்பதற்காக சிறுவனை கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியின் கௌதம்புரி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் இரண்டு நாட்களாக தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் இதுகுறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிறுவனின் பக்கத்து வீட்டுக்காரரான நீரஜ்(21) என்பவர் சிறுவனை கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் அவர் சிறுவனை கடத்திச் சென்று அலிகார் பகுதியில் உள்ள அவரது தாய் மாமா சுனித் பாபுவின் வீட்டில் தங்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து நீரஜிடம் இது குறித்து விசாரணை நடத்தியதில், தனது மாமாவின் மனைவிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் யாரும் உயிர் பிழைக்கவில்லை. இதனால் மாமாவிற்கு பரிசாக வழங்குவதற்காக சிறுவனை அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனை மீட்ட போலீசார் நீரஜ் மற்றும் அவரது மாமாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A youth who kidnapped a 5 year old boy to give a gift to his uncle was arrested in Delhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->