தூத்துக்குடி : கையும் களவுமாக பிடிபட்ட கஞ்சா வியாபாரி - போலீசிடம் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சி.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : கையும் களவுமாக பிடிபட்ட கஞ்சா வியாபாரி - போலீசிடம் இருந்து தப்பிக்க தற்கொலை முயற்சி.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக தொடர்ந்து போலீஸாருக்குப் புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது. அந்த புகாரின் படி போலீஸார் சதாம் உசேனை தீவிரமாகத் தேடிவந்தனர். 

இந்த நிலையில் சதாம் உசேன், தச்சநல்லூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சதாம் உசேனைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். 

அப்போது சதாம் உசேன் திடீர் என, தான் மறைத்து வைத்து இருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் சதாம் உசேனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸார் சுற்றிவளைத்ததும் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பேரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

accuest sucide attempt in thoothukudi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->