தொடையில் வைத்து தங்க கட்டிகளை கடத்திய நடிகை; விசாரணையில் பகீர் தகவல்..!
Actress smuggles gold bars in her thigh
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் 32 வயதான நடிகை ரன்யா ராவ். இவர் தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் 'வாகா' என்ற படத்தில் நடித்திருந்தார். பெங்களூரு லாவல்லி ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதித்துறை டி.ஜி.பி.யான ராமசந்திரா ராவின் வளர்ப்பு ஆவார். இவர் கடந்த 03-ந் தேதி துபாயில் இருந்து, 14 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்த போது, பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ரன்யா ராவ் பற்றி பரபரப்பு தகவல்கள் விசாரணையில் வெளிவந்துள்ளது. ரன்யா ராவின் தந்தை டி.ஜி.பி.யாக இருந்து வருவதால் துபாயில் இருந்து அவர் பெங்களூருவுக்கு வரும் போதெல்லாம், விமான நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரே, அவரை வெளியே அழைத்து வந்துள்ளனர்.
இதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட ரன்யா ராவ், தன்னிடம் அதிகாரிகள் சோதனை நடத்துவது இல்லை என்பதால், துபாயில் இருந்து பெரிய அளவில் தங்கத்தை அவர் அவ்வப்போது கடத்தி வந்துள்ளார். அத்துடன், அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்ததும், கடந்த ஆண்டில் மட்டும் அவர் 40 முறையும், இந்த ஆண்டு இதுவரை 08 முறையும் அவர் துபாய்க்கு சென்று வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதாவது துபாயிலிருந்து பெங்களூருவுக்கு தங்கக்கட்டிகளை கடத்தி வருவதற்கு சோதனையிலிருந்து தப்பிக்க தொடையில் தங்கக்கட்டிகளை ஒட்டிவைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
அத்துடன், ரன்யாவிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள்,ரூ.2.5 கோடி ரொக்கம், ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Actress smuggles gold bars in her thigh