பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி.! கையில் இருந்த துப்பாக்கி வெடித்ததால் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி.! கையில் இருந்த துப்பாக்கி வெடித்ததால் உயிரிழப்பு.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா ஹத்தி செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் நாயக் ஜஸ்பிர் சிங். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நாயக் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்த துப்பாக்கி வெடித்து குண்டு அவரது உடலை துளைத்தது. 

இதில், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த சக வீரர்கள் நாயக் ஜஸ்பிர் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.  அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி எவ்வாறு வெடித்தது? நாயக் ஜஸ்பிர் சிங்கே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

army man died for gun shoot in jammu kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->