#மேற்குவங்கம் || என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி மேற்கு வங்க மாநிலம் பூபதி நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு வீடு இடிந்து, மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணையை எடுத்துக் கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக சென்ற கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டம் பூபதி நகரில் என்ஏஐ அதிகாரிகள் விசாரணைக்கு சென்றபோது கல்வீசி தாக்கப்பட்டதில் கார் கண்ணாடி உடைந்தது‌. மேலும் காரில் பயணம் செய்த என்ஐஏ அதிகாரிகள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பகுதியில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படை குவிக்கப்பட்டு அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attack on NIA officers in West Bengal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->