முன்னாள் அமைச்சரின் தந்தையை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த கும்பல்!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் முன்னாள் அமைச்சரின் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. 

பீகார் மாநிலத்தின் விகாஷீல் இன்சான் கட்சி(விஐபி) கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சர்ருமான முகேஷ் சஹானியின் தந்தை ஜித்தன் சஹானி இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பிகர் மாநிலத்தின் தார்பங்கா மாவட்டத்தில் உள்ள பூர்வீக வீட்டில் இந்த கொலை அரங்கேறியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மக்களிடையே செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்து வந்தவர் முகேஷ் சஹானி. இவரின் தந்தை கொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் இவரின் கட்சியான விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) இந்தியா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலை சம்பவம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, ஜித்தன் சஹானியின் வீட்டில் புகுந்த மர்ம நபர்களை, ஜித்தன் சகானி தடுக்க முயன்றதாகவும், இதனால் அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும் மர்ம நபர்கள் ஜித்தன் சஹானி வீட்டில் திருடவே வந்துள்ளதாகவும், இந்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முக்கிய அரசியல் கட்சித் தலைவரின் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவரும், மாநில துணை முதலமைச்சர் சவுத்ரி, கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar VIP Leader dad Hacked to death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->