வரதட்சணை கேட்டு மனைவி மீது தாக்குதல் - வாங்கி ஊழியர் செய்த கொடூரச் செயல்.!
case file against man for dowry in banglore
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் வங்கி ஊழியாரான இவர் சுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த 2021-ம் ஆண்டு ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகினார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களாக வரதட்சணை மற்றும் உடல் எடையை குறிப்பிட்டு தகராறு ஏற்பட்டது. அதாவது, திருமணத்தின் போது அழகாக இருந்த சுந்தரி, தற்போது குண்டாக உள்ளதனால் சாந்தகுமாருக்கு பிடிக்கவில்லை.
இதை தட்டிகேட்க வந்த சுந்தரியின் பெற்றோரையும், சாந்தகுமார் அவமதித்துள்ளார். ஏற்கனவே சாந்தகுமார் மீது சுந்தரி போலீசில் வரதட்சணை புகார் அளித்திருந்தார். அதன் படி சாந்தகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுந்தரி மற்றும் அவரது மகன், தந்தை ஆகியோர் மீது சாந்தகுமார் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக சுந்தரி மீண்டும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சாந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
case file against man for dowry in banglore