யாரும் பாகிஸ்தான் போகாதீங்க! தாக்குதல் நடத்த போறாங்க - எச்சரிக்கும் அமேரிக்கா! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர அறிவிப்பை வெளியிட்டு, பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிட்டுள்ள அமெரிக்கர்கள் தங்களது பயண திட்டங்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.  

அந்நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், **"பாகிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் ஆயுத கலவரம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதால், அந்நாட்டுக்குச் செல்லும் முடிவை மக்கள் தவிர்க்க வேண்டும்"** என்று கூறப்பட்டுள்ளது.  

மேலும், பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் உள்ளிட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்யவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

இந்த நடவடிக்கை, அந்நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்ததை முன்னிட்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorist attack Pakistan America warn


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->