டெல்லியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சுட்டுக்கொலை! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தா சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சி சம்பவம் அறங்கேறி உள்ளது.

காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் இந்த படுகொலையை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

காயத்திற்கு கட்டுப்போட்ட பின், மருத்துவரை சந்திக்க வேண்டும் என கூறிய இளைஞர்கள் அவரது அறையில் சந்தித்து சுட்டுக்கொன்றனர் என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

மருத்துவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைத்து பயிற்சி பெண் மருத்துவர் பாலில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi private hospital doctor hacked to death gun fire


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->