கடும் வெயில் எதிரொலி: கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Extreme heat Kerala Govt holiday announcement
கேரளாவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிப்பதால் அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மே 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்துக்கு, கேரளா அரசு விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காலை 11 மணி முதல் மதியம் 3 வரை கோடைகால விடுமுறை வகுப்புகள் நடத்தவும் கேரளா அரசு தடை விதித்துள்ளது. காவல்துறை, தீயணைப்பு துறை உள்ள வீரர்கள் பகல் நேரங்களில் ஒத்திகை பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால் கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் ஆகியோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Extreme heat Kerala Govt holiday announcement