மகாராஷ்டிரா : குடியிருப்புக் கட்டிட விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா : குடியிருப்புக் கட்டிட விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவண்டி பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுள்ளது. இந்த கட்டிடத்தில் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் இந்தக் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். 

இதற்கிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது "இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

finance announce to died peoples family in maharastra building collapse


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->