ம.பியில் அமைச்சரின் சகோதரர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி செய்த 5 பேர் கைது.!! - Seithipunal
Seithipunal


ம.பியில் அமைச்சரின் சகோதரர் மீது காரை ஏற்றி கொலை முயற்சி செய்த 5 பேர் கைது.!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்து வருபவர் பிரத்யுமன் சிங் தோமர். இவருடைய சகோதரர் சதேந்திர சிங் தோமர். இவர் கடந்த 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு மாநிலத்தின் தலைநகர் குவாலியரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்பார்த்த சதேந்திர சிங் தோமர் அவர்களை தட்டிக்கேட்டார். அதன் பின்னர் மர்ம நபர்கள் தாங்கள் வந்த காரில் ஏறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மர்மநபர்கள் சதேந்திர சிங் தோமர் மீது 2 முறை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர்  சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்தக் கார் ஒரு டிராக்டர் மீது மோதி நின்றது. 

உடனே அதிலிருந்த மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு வந்த போலீசார் தப்பிச்ச செல்ல முயன்ற 5 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five peoples arrested for kill attack on minister brother


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->