மகாராஷ்டிரா || நொடிப்பொழுதில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


அமராவதி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி அருகே ஐம்பது பேருடன் சென்ற தனியார் பேருந்து ஒன்று முப்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழு, பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில் பேருந்து வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பேருந்து விபத்தில் சிக்கி சுமார் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples died for private bus accident in maharastra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->