ஆந்திராவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் பலி, பலர் காயம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம்,நந்தியால் அருகே உள்ள சார்பு ரேவூ என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 60 வயதான சுப்பம்மா மற்றும் 10 வயதான தினேஷ் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த 8 பேரும் நந்தியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்ப விசாரணையில், வீட்டில் சமையல் செய்யும் போது கியாஸ் சிலிண்டர் கசிந்து வெடித்ததாக தெரியவந்துள்ளது.இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gas cylinder Explosion Andhra Pradesh 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->