மும்பை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த தங்க தூள்கள் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த இந்திய குடும்பத்தினரிடமிருந்து ரூ. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க தூள்கள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக மும்பை சுங்கத்துறை அதிகாரி தெரிவிக்கையில், 'சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்த தம்பதி மற்றும் அவர்களது குழந்தையின் உள்ளாடையில் ரூ. 1,05,27,331 மதிப்புள்ள தங்க தங்க தூள் பாக்கெட்டுகள் கடத்தி வந்ததை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதே போல் சிங்கப்பூரிலிருந்து பயணித்த இந்திய குடும்பத்தினரிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள தங்க தூள்களை கைப்பற்றினர். 

இரு பயணிகளும் தங்கத்தூள்களை உள்ளாடைகளிலும் அவர்களது குழந்தைகளின் டைப்பர்களிலும் மறைத்து வைத்திருந்தனர்' என தெரிவித்தார். 

இதுபோல் முன்னதாக கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் மலக்குடலுக்குள் மறைத்து வைத்திருந்த 700 கிராம் தங்க பசையுடன் ஒருவர் கைதானார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 40 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold powder smuggled  Mumbai airport


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->