அப்படி செய்யாதீங்க! நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று தெலுங்கானா சட்டசபையில் இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் உள்ளிட்டவர்கள் பல கருத்துக்களை தெரிவி இது இருந்தனர்.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எந்த விதமான தவறான மொழி அல்லது நடத்தையை நாட வேண்டாம். 

எப்போதும் போல் தங்கள் உணர்வுகளைப் பொறுப்புடன் வெளிப்படுத்துமாறு எனது ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். 

என் ரசிகர்கள் எனப் போலி ஐடிகள் மற்றும் போலி சுயவிவரங்கள் மூலம் தவறாகச் சித்தரித்து, தவறான பதிவிட்டு யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரசிகர்கள் இதுபோன்ற பதிவுகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RevanthReddy AlluArjun 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->