மனம் விட்டு பேசுங்க! நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து தொடர்பான வழக்கில் மனம்விட்டு பேசுமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.  

நடிகர் ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் தொடர்பில் இருவரும் இன்று நேரில் ஆஜரானனர். 

சமரச பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் முயற்சி செய்தது. ஆனால் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெறவில்லை என மத்தியஸ்தர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து, இருவரும் சமரச தீர்வு மையத்தில் மீண்டும் கலந்துரையாட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Divorce case Jayam Ravi Aarti Actor


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->