பயங்கரம் - ஆந்திராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து சரக்கு ரெயில் ஒன்று இன்று அதிகாலை பித்ரகுண்டா ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனால், விஜயவாடா நோக்கி செல்லும் ரெயில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பித்ரகுண்டா ரெயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 144வது லெவல் கிராசிங் கேட்டில் சரக்குகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தத் தகவலை அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் விஜயவாடா நோக்கி செல்லும் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சில மணி நேரத்தில் ரெயில் சேவைகள் சரி செய்யப்பட்டு வழக்கம் போல் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goods train derailed in andira


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->