குழந்தைகள் நரபலி : லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்!! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் நரபலி.லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்.இந்த 21ம் நூற்றாண்டிலும் சிலர் மூட நம்பிக்கைகளில் மூழ்கிஇருப்பதும், அதன் காரணமாக சிறு குழந்தைகளை பலி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் லக்னோவில் நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

லக்னோவின் முசாபர் நகரைச் சேர்ந்த தேஜ்பால் - சீமா தம்பதியருக்கு கேசவ் (7), லக்கி (4) என்ற இரு மகன்கள் இருந்தனர். மேலும் தேஜ்பாலுக்கு ஹரிஷ் என்ற சகோதரரும், ஹரிஷுக்கு அங்கிதா என்ற மனைவியும் அருகிலுள்ள கட்டௌலி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கிதாவின் தாய் ரீனா சங்கீதாவின் சகோதரியின் ஆத்மாவால் அவர் மனநிலை பிறழ்ந்தவராக உள்ளதாக தெரிவித்து அவரை ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மந்திரவாதி இரு குழந்தைகளை நரபலி கொடுத்தால் தான் அந்த ஆத்மா வெளியேறும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து சிறிது நாட்கள் இடைவெளியில் தேஜ்பாலின் இரு குழந்தைகளையும் நரபலி கொடுத்துள்ளனர். இதற்கு தேஜ்பால் - சீமா தம்பதியும் உடந்தை என்று தெரிகிறது. இந்த சம்பவம் போலீஸாருக்கு தெரிய வந்தபோது உடல்நிலை காரணமாக குழந்தைகள் இறந்து விட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். 

ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்தில் சோதனையிட்டபோது,"இப்போது என் ஆன்மா சாந்தியடைகிறது" என்று எழுதப்பட்ட ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் இருந்த கையெழுத்து அங்கிதாவுடையது என்பது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து போலீசார் அங்கிதா மற்றும் அவரது தாயாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Human sacrifice of children Shocking incident in Lucknow


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->