ஆந்திராவில் நல்லாட்சி தொடர... ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட செய்தி குறிப்பால் உற்சாகமடைந்த கட்சியினர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக 81.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

அனைத்து முதியவர்கள், சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள், சிறுபான்மையின சகோதரர்கள், கோடை வெயிலை தாங்கிக்கொண்டு வாக்களித்த இளைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்களை பாராட்டுகிறேன். இன்றுவரை காணப்படும் நல்லாட்சியும் திறமையான நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி நிர்வாகம் மேம்படுத்தப்பட வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருப்பது அவரது கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jagan Mohan reddy announced improve good governance


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->