200 கோடி ரூபாய் மோசடி.. பொதுமக்களே உஷார்.. கேரள தம்பதி கைது.!  - Seithipunal
Seithipunal


பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக தெரிவித்து பலரையும் ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் புற்றிலிருந்து வரும் ஈசல் போல பெருகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். 

பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதை தவிர இதுபோன்ற மோசடிகளுக்கு வேறு எதுவும் தீர்வுகளாக இருக்காது. ஏனெனில் இந்த மோசடியில் ஈடுபடும் 100 நபர்களில் 40 பேர் கூட சிக்குவதில்லை என்பதுதான் உண்மை.

இது போன்ற ஒரு சம்பவத்தில் மோசடி செய்த கேரள தம்பதி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக கூறி மக்களிடம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

இவர்கள் மீது போலீசில் மோசடி புகார் கொடுக்கப்பட்டது இதை அறிந்த தம்பதிகள் துபாய்க்கு தப்பி சென்றுள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து அவர்கள் மீண்டும் டெல்லி திரும்பிய போது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Couples cheat 200 Crores


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->