பிரதமர் ஏன் இதற்க்கு நடவடிக்கை எடுக்கவில்லை.. - கொந்தளிக்கும் மல்லிகார்ஜுன கார்கே.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

நான்காம் கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. பிரதமர் மோடியை வழி அனுப்பி வைக்க நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர். 

ஜூன் நான்காம் தேதி இந்தியா கூட்டணி புதிய ஆட்சியை அமைக்கும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவாரக்ள். 

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என கர்நாடகா தெரிவித்துள்ளது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் பல அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவது குறித்து பேசி உள்ளனர். 

இவர்களுக்கு எதிராக பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அவர் ஏன் அமைதியாக இருக்கிறார். அரசியலமைப்பு குறித்து யாரும் இப்படி பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mallikarjun kharge speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->