விஜிலென்ஸ் அதிகாரி போல் நாடகம் - கல்லூரி மனைவியை 3 வது திருமணம் செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள, புளியங்குடி அருகே பட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ரயிலில் பயணம் செய்த போது, ராஜபாளையம் அருகே சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள்ராயன் என்பவரை சந்தித்துள்ளார். அப்போது அருள்ராயன் தன்னை ஒரு விஜிலென்ஸ் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

இதையடுத்து இருவரும் நட்பாக பழகிவந்த நிலையில், சில காலத்திலேயே அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் மதுரையில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில், காயத்ரி தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அருள்ராயனிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அருள்ராயன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அருள்ராயன் காயத்ரியை சமாதானம் செய்ய அவரது சொந்த ஊரான பட்டாகுறிச்சியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

அப்போது, காயத்ரி குடும்பத்தாருக்கு அருள்ராயன் மீது சந்தேகம் ஏற்பட்டதனால், அருள்ராயனின் சொந்த ஊரான சுந்தரநாச்சியாபுரம் சென்று விசாரித்தபோது அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி உள்ளதும், அவர் விஜிலென்ஸ் அதிகாரியே இல்லை என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, காயத்ரியின் குடும்பத்தினர் போலீசில் அருள்ராயன் மீது பண மோசடி உள்ளிட்ட புகார்களை அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் புளியங்குடி காவல்துறையினர் இரு தரப்பையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

அப்போது, அருள்ராயன், காயத்ரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி அளித்த புகாரின் படி, காவல்துறையினர் அருள்ராயனை நேற்று கைது செய்தனர். கல்லூரி மாணவியை ஏமாற்றி மூன்றாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man arrested for got three marriage in tenkasi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->