வீட்டு வாடகை தராத ஆத்திரம் - இளம்பெண்ணை வெளுத்து வாங்கிய உரிமையாளர்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேந்திர மானவவாலா. இவருக்கு ராதே நகர் சொசைட்டியில் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த பெண் கடந்த இரண்டு மாதமாக வீட்டு வாடகையை செலுத்த தவறியுள்ளார்.  இதனால் வீட்டின் உரிமையாளர் மானவவாலா அந்த இளம்பெண்ணைத் தாக்கியுள்ளார். 

இது தொடர்பான வீடியோ நேற்றிலிருந்து சமுக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவரும் பெண்ணுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man attack woman for delay house rent in gujarat


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->