அடேங்கப்பா.. தனிச் செயலாளரிடம் இவ்வளவு பணமா? அதிர்ந்து போன ED அதிகாரிகள்.!! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஜியின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலன ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில அரசு பொறியாளர் வீரேந்திர ராம் வழக்கில் அம்மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் தனிச் சயலாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பெருந்தொகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

ஜார்கண்ட் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்து புகார் எழுந்தது அடுத்து அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை பொறியாளர் வீரேந்திரன் ராமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் ஆலம்கீர் ஆலம்தனிச் செயலாளரான சஞ்சீவ் லால் என்பவரின் வீட்டு உதவியாளரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பணம் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Money seized from Jharkhand minister secretary house


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->