வீட்டிலிருந்து மாயமான வாலிபர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிணமாக மீட்பு.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள கார்வாலே பகுதியை சேர்ந்தவர் விவசாயி குஷப்பா. இவருடைய மகன் ராஜேஷ் சங்கப்பா (28). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடினர்.

இதையடுத்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் சங்கப்பாவை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்பொழுது கார்வாலே புறநகர் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவர் ராஜேஷ் சங்கப்பா என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயம் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையில், ராஜேஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி ஒன்று வாங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysterious youth recovered as a dead body with gunshot wound in Karnataka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->