நீட் முறைகேடு - ஜார்கண்டில் மேலும் ஒருவர் கைது.!
one more man arrest neet malpractice issue in jarkant
நடந்து முடிந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரைக்கும் 6 வழக்குகளை பதிவு செய்துள்ள அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களில் சோதனை, கைது என்று தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/neet hsadhjdsf.jpg)
இந்த நிலையில், ஜார்கண்டை மையமாக கொண்டு செயல்படும் வினாத்தாள் கசிய விடும் கும்பல் ஒன்று குறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உளவுத்தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி விசாரணை நடத்தியதில், தன்பாத்தை சேர்ந்த அமன் சிங் என்பவரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 004.jpg)
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இவரும் ஒரு குற்றவாளி என்பதால், அமன் சிங்கிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
one more man arrest neet malpractice issue in jarkant