காசு இருந்தா வினாத்தாள் அல்ல...தேர்வு அமைப்பையே விலைக்கு வாங்கலாம்! அடித்து ஆடும் ராகுல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினருக்கும் ஆளுங்கட்சியினர்களுக்கும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் குளறுபடிகள் எதிர்த்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு நீட் குளறுபடி தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று மழை கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், நீட் தேர்வு மட்டுமின்றி இந்தியாவில் நடக்கும் அனைத்து தேர்வுகளும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளதாக தெரிகிறது.

இந்த விவரம் குறித்து எந்த புரிதலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு இல்லை. இந்தியாவின் தேர்வு முறை என்பது மோசடியானது. நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கி விடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition leader Rahul Gandhi said India election system is rigged


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->