பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சுற்றுப்பயணம் முடித்திவிட்டு நாடு திரும்பினார்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் நாட்டுக்கு 5-வது முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வாங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் சிங்கப்பூர் - இந்தியா இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டன.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் அரசு முறைப் பயணம் குறித்து தனது  'எக்ஸ்' தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:- "எனது சிங்கப்பூர் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த பயணமானது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த உதவும். சிறப்பான வரவேற்பு அளித்த சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். இந்த அழைப்பை சிங்கப்பூர் பிரதமர் ஏற்றுக்கொண்டார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்திக்கொண்டு ,தனி சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Narendra Modi returned to the country after completing his Singapore tour


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->