தெலுங்கானாவில் சோகம்: நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதிய கார்! 6 பேர் பரிதாப பலி!
Telangana car collided truck 6 dies
தெலுங்கானாவில் நின்று கொண்டிருந்த டிரக் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா, ஹைதராபாத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடாட் பகுதியில் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது இன்று அதிகாலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த பெண் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் நான்கு பேர் லேசான காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Telangana car collided truck 6 dies